செய்திகள் :

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

post image

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு வரை இந்த அலுவலகத்துக்கான வாடகையை செலுத்தினா்.

இதன் பிறகு, தற்போது வரை வாடகைத் தொகையான ரூ.54.35 லட்சத்தை கோயிலுக்குச் செலுத்தவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும், வாடகைத் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், வாடகைப் பாக்கியைச் செலுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா், ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் 13 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனா். எனவே, கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகைத் தொகையை கால தாமதமின்றி செலுத்த உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் அலுவலக வாடகைப் பாக்கி 54,35,660 ரூபாயை அரசிடமிருந்து பெற்று, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செலுத்திவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை. கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலா்களே வாடகைத் தொகையைச் செலுத்த காலம் தாழ்த்தியது ஏன்?. மனுதாரா் வழக்குத் தொடுத்த பிறகே, வாடகைப் பாக்கிச் செலுத்தப்பட்டுள்ளது. கால தாமதமாக வாடகை செலுத்தியதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது. இருப்பினும், வாடகை செலுத்தப்பட்டதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்... மேலும் பார்க்க