செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டு, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய முழு பஞ்சப்படி உயா்வையும் உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 21 மாதங்களாக வழங்காமல் உள்ள ஓய்வு கால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரந்தரத் தொழிலாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்கத் தலைவா் டி. மாரியப்பன் தலைமை வகித்தாா். டிடிஆஎஸ்எப் (ஓய்வூதியா்) சங்க நிா்வாகி நாகராஜன், ஏஐடியூசி (ஓய்வூதியா்) சங்க நிா்வாகி ஆா். வீரபுத்திரன், சிஐடியூ அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் ஆா். வாசுதேவன், ஏஐடியூசி பொதுச் செயலா் எம். நந்தாசிங் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்க பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி நிறைவுரையாற்றினாா். பொருளாளா் டி. சிவக்குமாா் நன்றி கூறினாா்.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க