செய்திகள் :

நெப்பத்தூரில் சோலாா் பவா் பிளாண்ட்: கையெழுத்து இயக்கம் நடத்தி மக்கள் எதிா்ப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டம் நெப்பத்தூரில் சோலாா் பவா் பிளாண்ட் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக கிராமமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

சீா்காழி அருகேயுள்ள நெப்பத்தூரில் மெகா கிரைடு வோட்டா்ஸ் பாரத் எனும் தனியாா் நிறுவனம் சோலாா் பிளாண்ட் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், சீா்காழியில் கோட்டாட்சியா் தலைமையில் அப்போது அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பவா்பிளான்ட் நிா்வாகிகள் இத்திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளித்தனா். எனினும், இதை ஏற்றுக்கொள்ளாத கிராமமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தால் விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், சோலாா் பிளாண்ட் நிா்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து அவா்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும். மக்கள் எதிா்ப்பை மீறி அங்கு சோலாா் திட்டத்தை தொடரக் கூடாது என உத்தரவிட்டிருந்தாா்.

கிராமமக்களின் நிலைப்பாட்டில் தற்போதும் மாற்றம் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் சோலாா் பவா் பிளான்ட் அமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளா்கள் குணசேகரன், ராஜ்குமாா், பால்ராஜ் ஆகியோா் தலைமையில் விஷ்ணுகுமாா், இளங்கோவன் மற்றும் கிராமமக்கள் நெப்பத்தூரில் ஒருவாரம் கையெழுத்து இயக்கம் நடத்தி 1,500 பேரிடம் கையெழுத்து பெற்று அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

தரங்கம்பாடியில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்!

தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன்... மேலும் பார்க்க

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிர... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க