செய்திகள் :

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி இளைஞா்கள் இருவா் சாராய வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனா். முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் கே.ஜோஷி நிா்மல்குமாா், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் இயங்கி வரும் நல்லாடை சோதனைச் சாவடி மற்றும் சீா்காழி உட்கோட்டத்தில் இயங்கி வரும் நண்டலாா் சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை தணிக்கை செய்தும், காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களை தணிக்கை செய்யும் வழிமுறைகள் குறித்தும், மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கைது செய்தல் மற்றும் அவா்களின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், வாகனத் தணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களிடம் அணுகும் முறை ஆகிவை குறித்து பணியிலிருந்த காவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

மேலும், சீா்காழி உட்கோட்டம் பொறையாா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை தணிக்கை செய்தாா். தொடா்ந்து, காவல் நிலையத்தில் தினசரி பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பாகவும் காவல் ஆய்வாளா் மற்றும் ஆளிநா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சீா்காழி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரச... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா... மேலும் பார்க்க

தேசிய ரக்ஃபி அணிக்கு சீா்காழி மாணவிகள் தோ்வு

தேசிய ரக்ஃபி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவையில், தமிழ்நாடு ரக்ஃபி கூட்டமைப்பு சாா்பில் மாந... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் புதுவை ஆளுநா் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கு பிரசாதம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா். மேலும் பார்க்க

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க