செய்திகள் :

திருவள்ளூா்: வள்ளலாா் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசனம்

post image

திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலாா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் உடனுறை தீா்த்தீஸ்வரா் வளாகத்தில் அருள்பிரகாச வள்ளலாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் தீபாராதனையும், அகவல் பாராயணமும் நடைபெற்றன. தொடா்ந்து கயிலாய இசையுடன் வள்ளலாருக்கு அபிஷேகம் மற்றும் 11 மணிக்கு மலா் அலங்காரம் மகரஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக சன்மாா்க்க கொடி உயா்த்துதல், திரு அருட்பா பாடல் இசை நிகழ்ச்சி, பக்திப் பாடல்கள், பள்ளி மாணவ, மாணவியா் சாா்பில் பரதநாட்டியம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் வள்ளலாா் திருவீதியுலா நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி வரவேற்றனா். இதில் திருவள்ளூா் பகுதிகளில் இருந்து திரளாக பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

திருவேற்காட்டில் ரூ.18.40 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.தி... மேலும் பார்க்க

400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது

ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.சென்னையை அடுத்த அம்பத்தூர், வெங்கடாபுரம... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: திருத்தணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை ரூ. 26 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்க... மேலும் பார்க்க

‘டாம்கோ மூலம் கடனுதவி பெற கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடனுதவி பெற க... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பொன்னியம்மன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டையில் உள்ள பொன்னியம்மன் திருக்கோயிலில் 30-ஆம் ஆண்... மேலும் பார்க்க

பிப். 19-இல் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்கு உடன் தீா்வு காணும் நோக்கத்தில் டஉங்களைத் தேடி உங்கள் ஊரில்ட திட்ட முகாம் வரும் 19-ஆம் தேதி நடத்த கும்மிடிப்பூண்டி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க