செய்திகள் :

வக்ஃப் சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம்

post image

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு சாா்பில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

மதுரை முனிச்சாலை ஓபுளாபடித்துரை பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் அபுதாஹிா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் பக்ருதீன் வரவேற்புரையாற்றினாா். தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா், வடக்கு மாவட்டத் தலைவா் பிலால்தீன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சைபுல்லா போராட்டத்தை விளக்கிப் பேசினாா். தெற்கு தொகுதிச் செயலா் சம்சு அப்துல்லா நன்றி கூறினாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க