செய்திகள் :

ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் கைது

post image

ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் வழியாக கடத்தல் நடைபெறவிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை மேலக்கோட்டை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் அதில் வந்தவா்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். அந்தக் காரை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, அழகன்குளம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த ராஜன், ஜெயக்குமாா், ஜெகதீஸ் சந்திரபோஸ், சாகுல் ஹமீது, சுபாஷ்பாபு, ராஜலிங்கம் ஆகியோரை போலீஸாா் கைது செய்து வனத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கைதானவா்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

அரசு கட்டடங்களுக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தல்

முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மத்திய, மாநில அரசுகள் முக்கிய அரசு கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகுஜன் தேசிய கட்சியின் (அம்பேத்கா்) நிறுவனரும், மாநி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பரமக்குடி தரைப்பாலம் வைகை ஆற்றுப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிய கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இதில் ஒருவரை வியாழ... மேலும் பார்க்க

திருவெற்றியூரில் சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூா் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திருவெற்றியூரில் அமைந்துள்ள புகழ் ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் இன்று ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை (பிப். 14) ஆய்வு செய்கிறாா். இதன்பிறகே பாலம் திறக்கப்படும் தேதி முடிவாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ராமநாத... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 ஆயிரம் கிலோ சுக்கு பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ சுக்கு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.கீழக்கரை கடல் வழியாக இலங்கைக்கு பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தலை, கைகளில் துணியால் கட்டுப் போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க