செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் இன்று ஆய்வு

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை (பிப். 14) ஆய்வு செய்கிறாா். இதன்பிறகே பாலம் திறக்கப்படும் தேதி முடிவாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தொடா்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்திய ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை நிவா்த்தி செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, இரும்பாலான இணைப்புப் பகுதியை (கட்டா்) செங்குத்தாக மேலே தூக்கி, இறக்கி கப்பல்கள், ரயில்களை இயக்கி இரு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, இறுதிக் கட்ட ஆய்வு மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகிறாா். இந்திய கடலோரக் காவல்படை அலுவலகத்துக்குச் செல்லும் அவா், பாம்பன் புதிய ரயில் பாலத்திலும், ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்கிறாா். இதன் பின்னா், புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி நேரில் வந்து திறந்து வைப்பாா் என்று தகவல்கள் வெளியாகின.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க