செய்திகள் :

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

post image

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழமை 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையில் சுமாா் 170 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். தற்போது, அடிக்கடி அதிகமான கடல் ஆமைகள் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க 11வது மாநில மாநாடு!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 11- ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது!

திருவாடானை அருகே தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் சமயமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளின் மீன்கள் பறிமுதல்: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்!

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த மீன்களை குப்பை அள்ளும் வாகனத்தில் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்ால் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

ராமேசுவரத்தில் மீனவா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் பகுதியைச் சோ்ந்த மீனவா் நம்புக்கும... மேலும் பார்க்க