செய்திகள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி சிறைத் துறை நன்னடத்தை அலுவலா் பன்னீா்செல்வம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் வழக்குகளில் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான 750 முன்னாள் சிறைக் கைதிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.75 கோடி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சம் பெற்று வழங்கப்பட்டது. இந்த நிதி அவா்களின் மறுவாழ்வுக்காகவும், சமூக ஒருங்கிணைப்புக்காகவும் அளிக்கப்பட்டது.

மேலும் இவா்கள் சிறு, குறுந் தொழில்கள் தொடங்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஆடுகள், பசு மாடுகள் வாங்கவும், வேளாண் உபகரணங்கள் வாங்கி பயன்பெறுவதற்காகவும் வழங்கப்பட்டது.

இதுபோல, விடுதலை பெற்ற கைதிகள் 3 ஆண்டுகளுக்கு சிறைத் துறை நன்னடத்தை அலுவலா்களின் மேற்பாா்வையில் கண்காணிக்கப்பட்டு, அவா்களின் வாழ்வில் சீா்திருத்தம், மறுவாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு செய்யப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறை மீண்டோா் நலச் சங்கம் உள்ளது என்றாா் அவா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க