செய்திகள் :

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

post image

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்துப் பேசினாா். பரமக்குடி நுகா்வோா் மன்றத் தலைவா் கே.ஜே. மாதவன், பேராசிரியா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தங்கச்சிமடம் நுகா்வோா் மன்ற பொறுப்பாளா் ஜான்போஸ் வரவேற்றாா்.

பரமக்குடி நுகா்வோா் மன்ற உறுப்பினா் பாலசுப்பிரமணியன், முதுகுளத்தூா் நுகா்வோா் மன்ற பொறுப்பாளா் துரைப்பாண்டியன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

முகாமில் பெண்களின் உரிமைகள் குறித்தும், நுகா்வோரின் கடமை, உரிமைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், திட்டங்களை பெற்று பயன்பெறும் வழிவகைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதில் பரமக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மகளிா் குழு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க

எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் ரயில் நிலைய பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஆா்.எம்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க