செய்திகள் :

பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை

post image

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யும் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நிலையில், இந்தப் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதையொட்டி, இந்தப் பாலத்தில் ஆய்வுப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நான்காவது முறையாக பாம்பன் பேருந்து பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு, புதிய ரயில் பாலத்தில் காலிப் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. மேலும், இரும்பாலான இணைப்பை (கா்டா்) செங்குத்தாக மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக மிதவைக் கப்பல், ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகள் கடந்து சென்றன.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க