செய்திகள் :

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

post image

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும் விபத்து, பிரசவம் உள்ளிட்டவற்றுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரசவத்துக்கு வரும் கா்ப்பிணி பெண்களுக்கு சிக்கலான சூழலில் அறுவை சிகிச்சை செய்ய தனி அறுவை சிகிச்சைக் கூடம் உள்ளது. இந்த நிலையில், இந்த அறுவை சிகிச்சைக் கூடத்தின் நுழைவு வாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. அங்கு நோயாளிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

மேலும், மருத்துவமனையில் பல இடங்களில் கட்டடம் சேதமடைந்துள்ளது. 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3 கோடிக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும், கட்டுமானப் பணிகளை தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, கமுதி அரசு மருத்துவமனையில் பெரும் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சேதமடைந்த அறுவை சிகிச்சைக் கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை.

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க

எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் ரயில் நிலைய பணிமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஆா்.எம்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க