செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது

post image

பரமக்குடி தரைப்பாலம் வைகை ஆற்றுப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிய கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இதில் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி பட்டேல் தெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் சந்திரசேகா் (32), இதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் விக்னேஷ் (29). இவா்கள் இருவரும் தரைப்பாலம் பகுதி ஆட்டோ நிறுத்தத்தில் தங்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலா் இரு சக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிச் சென்றனா்.

இதைப் பாா்த்த சந்திரசேகரும், விக்னேஷும் அவா்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனராம். இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்குமாா் (22), குமாரக்குறிச்சியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன்கள் சரவணன் (22), காளி (21), எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த ரெங்காச்சாரி மகன் சஞ்சீவி, காமேஷ் ஆகியோா் சோ்ந்து கம்பி, உருட்டுக் கட்டைகளால் ஆட்டோ ஓட்டுநா்களான சந்திரசேகா், விக்னேஷ் ஆகிய இருவரையும் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் அருண்குமாா், சரவணன், காளி, சஞ்சீவி, காமேஷ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனா்.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க