செய்திகள் :

அரசு கட்டடங்களுக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தல்

post image

முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மத்திய, மாநில அரசுகள் முக்கிய அரசு கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகுஜன் தேசிய கட்சியின் (அம்பேத்கா்) நிறுவனரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிரமோத்குரில் தெரிவித்தாா்.

இவா் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் டிஎன்டி மக்களின் கோரிக்கைகள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த அவா் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு தேவா் வாழ்ந்த பூா்வீக வீடு, பூஜை அறை, புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மத்திய, மாநில அரசுகள் மிக முக்கியமான அரசு கட்டடங்கள், விமான நிலையங்களுக்கு சூட்ட வேண்டும். அரசியல் சூழ்ச்சியால் தேவா் குறித்து தவறான தகவல்களை சிலா் தமிழ்நாட்டில் பரப்புகின்றனா். தமிழ்நாட்டில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்படும் ஜாதிய பிரச்னைகள், பதற்றமான சூழ்நிலைகளை தமிழ்நாடு அரசு கவனமாக கையாண்டு யாருக்கும் பாதிப்பு வராமல் கட்டுப்படுத்த வேண்டும். தேவரின் கொள்கைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், அரசியல் குறித்து இளைஞா்கள் அதிகம் படிக்க வேண்டும். டிஎன்டி பிரிவில் உள்ள மக்களுக்கான உரிமைகள், உதவிகள், அவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மத்திய அரசுகளிடம் வலியுறுத்துவேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பகுஜன் தேசிய கட்சியின் மாநில பொறுப்பாளா் லூயிஸ், திண்டுக்கல் மாவட்டத் தலைவா் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சீனிவாசன், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலா் வீரப்பெருமாள், கமுதி மறவா் இன அறக்கட்டளை செயலா் கணேசன், பொருளாளா் செல்லப்பாண்டியன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் மூக்கூரான், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க