செய்திகள் :

திருவெற்றியூரில் சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

post image

திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூா் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருவெற்றியூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலுக்கு சுற்று வட்டாரத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கி சுவாமி தரிசனம் செய்கின்றனா். இவா்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இது சேதமடைந்ததையடுத்து, ஊராட்சி நிா்வாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.53 ஆயிரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. ஆனால் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட வில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, ஊராட்சி நிா்வாகத்தினா் தக்க நவடிக்கை எடுத்து சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க