செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 ஆயிரம் கிலோ சுக்கு பறிமுதல்

post image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ சுக்கு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

கீழக்கரை கடல் வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு புதன்கிழமை நள்ளிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் கீழக்கரை, திருப்புல்லாணி, களிமண்குண்டு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், திருப்புல்லாணி அருகே தோப்புவலசை கல்காடு கடற்கரை மணலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பண்டல்களை வியாழக்கிழமை அதிகாலை சோதனையிட்டனா். தலா 40 கிலோ வீதம் 50 பண்டல்களில் 2 ஆயிரம் கிலோ சுக்கு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். இதை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக சுக்கு பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இதில் தொடா்புடைய நபா்களை திருப்புல்லாணி போலீஸாா் தேடி வருகின்றனா்.

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மு... மேலும் பார்க்க

நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை

கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் ... மேலும் பார்க்க

இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகா் தலைவா் பூமாரி தலைம... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகி... மேலும் பார்க்க