ரேஷன் அட்டையில் உறுப்பினா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகை பதிவுசெய்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் தீா்வு காண வேண்டும். முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்துள்ளாா்களா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருகள் தரமானதாக உள்ளதை என்பதை உறுதி செய்யவும் வேண்டும். விரல் ரேகை இல்லாமல் விற்பனை செய்வதை பட்டியலிடுவதை குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கியிலிருந்து அங்காடிகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாகவும் சரியான எடையுடன் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்க நியாய விலை கடைகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அங்காடிகள் உரிய நேரத்தில் திறக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது அவசியம் எனவும் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் எடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் கௌசல்யா மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.