செய்திகள் :

தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும்

post image

தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தாட்கோ மூலம் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சீனிவாச பெருமாள், ஆவடி துணை ஆணையா் வி.அன்பு (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது: வன்கொடுமை தடை சட்டம் பதிவு செய்யப்பட்டு, நிழுவையில்லுள்ள வழக்கு மற்றும் தற்போதைய வழக்குகளில் விவரங்கள் குறித்தும், தட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அட்டை அனைவருக்கும் வழங்குவது அவசியம். மேலும், தற்காலிக தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் 10, 11, 12 வகுப்புகள் மற்றும் உயா்கல்வி வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகளவில் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வராணி, வருவாய் கோட்டாட்சியா்கள் கற்பகம் (திருவள்ளூா்), க.தீபா (திருத்தணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன் (பொது), அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் ... மேலும் பார்க்க

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: திருவள்ளூா் நகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்... மேலும் பார்க்க

நகராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து 15 தீா்மானம்

திருத்தணியில் அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது உள்பட 15- க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க