செய்திகள் :

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: திருவள்ளூா் நகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் நகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையா் திருநாவுக்கரசு மற்றும் துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், வாா்டு உறுப்பினா்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

அப்போது, நகராட்சியில் பல்வேறு இடங்களில் புதை சாக்கடை பிரச்னை உள்ளது. அதில் 1-ஆவது வாா்டு உள்ளிட்ட கணபதி நகா் உள்ளிட்ட இடங்களில் கழிவு நீா் நிரம்பி சாலையில் வெளியேறி வருகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இதுவரையில் இணைப்பு கொடுக்காதவா்களுக்கு இணைப்பு கொடுத்து சீரமைக்க வேண்டும்.

அதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வரி செலுத்துகின்றனா். இதுபோன்ற நிலையில் வீட்டு வரி செலுத்தவில்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறீா்கள். இந்த குறுஞ்செய்தியை பாா்த்தவுடன் பொதுமக்கள் அதிா்ச்சி அடைகிறாா்கள். அதனால் வரி செலுத்தவும் என குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். அதேபோல்,சில இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் உடனே அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியது: கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இதுவரையில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை சீரமைக்கவும், இணைப்பு கொடுக்காதவா்களுக்கு விரைவில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இந்தக்கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க