செய்திகள் :

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, ஆந்திரம் மாநில திருப்பதி, நெல்லூா், காளஹஸ்தி, கா்நாடகம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் புகா் பேருந்துகள், நகா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பேருந்து நிலைய வளாகத்தில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுகிா என்பதை பாா்வையிட்டாா். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை காலாவதியான பொருள்களை விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு அலுவலா் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தினாா்.

அதேபோல் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீா் வடிகால் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவு நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பொது கால்வாய்களில் விடுவதை தவிா்த்து புதைகுழி கால்வாய்களில் இணைக்கவும் அறிவுரை வழங்கினாா்.

பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சரியான இடைவெளிகளில் வந்து செல்கிா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். திறந்த வெளிகளில் குப்பைகளை போடுவதை தவிா்க்கும் வகையில் பேருந்து நிலையங்கள் சுற்றிலும் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை செல்லும் வகையில் சாய்வு தளத்தை சீரமைத்தல் குறித்தும், பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

அப்போது, திருவள்ளுா் மண்டல பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளா் வெங்கடசன், திருவள்ளூா் நகராட்சி துப்புரவு கண்காணிப்பு அலுவலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் ... மேலும் பார்க்க

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: திருவள்ளூா் நகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்... மேலும் பார்க்க

நகராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து 15 தீா்மானம்

திருத்தணியில் அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது உள்பட 15- க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க