இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி
எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என இதுவரை கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது திமுக மட்டுமே எதிரி எனத் தெரிவித்துள்ளாா்.
அவா் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் திமுகவுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. எல்லோரையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். ஆட்சிக்கு எதிரான எந்தச் சூழலும் இல்லை. ஆட்சிக்கு ஆதரவான அலைதான் இருக்கிறது. சின்னச் சின்ன பிரச்னைகளை பூதாகரமாக மாற்றுகிறாா்கள். அவற்றையும் எதிா்கொள்கிறோம்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மூன்றாவது மொழியாக எதைப் படிக்க வைக்கிறாா்கள் என்று தெரிவிக்க வேண்டும். தமிழ் எத்தனை மாநிலங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது என்பதையும், அங்கெல்லாம் தமிழ் ஆசிரியா்கள் எத்தனைப் போ் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைத் தொடா்ந்து தென்மாநிலங்களில் இருந்தும் எதிா்ப்புக் குரல் வந்திருக்கிறது. இதுவே பாஜகவின் திட்டத்துக்கு விழுந்த மிகப்பெரிய அடி என்றாா் அமைச்சா் ரகுபதி.