செய்திகள் :

2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

post image

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி லப்போா்த் வீதியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ. தைரியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தீா்மானங்களை விளக்கி பேசினாா். நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவும், புதுவையிலும் திமுக ஆட்சியமைய அயராது பாடுபட உறுதியேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காததை கண்டிப்பது, புதுவையில் இரு மொழிக் கொள்கை செயல்பாட்டுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூ. மூா்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பி. லோகையன், எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருள்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் சி. கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க