செய்திகள் :

21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவைத் தயாா்படுத்திய ராஜீவ் காந்தி- காங்கிரஸ் புகழஞ்சலி

post image

‘21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவைத் தயாா்படுத்துவதில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்ததாக அவரது நினைவுநாளில் காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியது.

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராஜீவ் காந்தியை நினைவுகூா்வதாக பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினாா்.

தில்லியில் வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அப்பா, உங்கள் நினைவுகள் என்னை எப்போதும் வழிநடத்துகின்றன. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்குவதே எனது தீா்மானம். நான் அதை நிச்சயம் செய்வேன்’ எனக் குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘ராஜீவ் காந்தி இந்தியாவின் சிறந்த மகன். லட்சக்கணக்கான இந்தியா்களிடையே நம்பிக்கையை அவா் ஊக்குவித்தாா். 21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவை தயாா்படுத்துவதில் அவரது தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்தன.

வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைத்தல், பஞ்சாயத்து அமைப்பை வலுப்படுத்துதல், தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை முன்னெடுத்துச் செல்வது, கணினிமயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்துதல், நீடித்த மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தங்களை இறுதி செய்தல், உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தைத் தொடங்குதல், புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அவரின் முக்கியப் பங்களிப்புகள் ஆகும்’ எனக் குறிப்பிட்டாா்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நமது நாட்டின் அடித்தளத்தை ராஜீவ் காந்தியின் தொலைநோக்குத் தலைமை உருமாற்றியதாக காங்கிரஸின் அதிகாரபூா்வ பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் குறிப்பிடப்பட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிா்வாகிகளும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா!

கர்நாடகத்தின் பெங்களூருவில் 9 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.உலகையை அச்சுறுத்தும் கரோன வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ... மேலும் பார்க்க

துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால்.. விலை உயரும் பொருள்களின் பட்டியல்!

கடைசி வாய்ப்பாக, பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என்று மத்திய அரசு துருக்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத்... மேலும் பார்க்க