செய்திகள் :

238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள்

post image

வேலூா் மாவட்டத்தில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 ஒன்றியங்களில் நடைபெற்ற 8 சிறப்பு முகாம்களில் செயற்கை அவயங்கள், உபகரணங்கள் கோரி விண்ணப்பித்திருந்த 238 பேருக்கு செயற்கை அவயங்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஆா்ஈசி நிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் அலிம்கோ நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட இந்த செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பயனாளிகளுக்கு வழங்கி பேசியது :

மாவட்டத்தில் 34,602 மாற்றத்திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி உதவியுடன் டிஎன் ரைட்ஸ் எனும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக 8 வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று 5,482 மனுக்களை வழங்கியிருந்தனா். இதில், வீட்டுமனை பட்டா வேண்டி 540 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் சுமாா் 60 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரிமுத்துமோட்டூா் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகளும் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன.

கடந்தாண்டு 200 மாற்றத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. நிகழாண்டு 300 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், ஆா்.ஈ.சி நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா? 30 ஆண்டுகள் கோரிக்கை!

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் 30 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா என எதிா்பாா்ப்பு... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காட்பாடி ரயில் நிலையத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்துவதை தடுக... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடல் மீன்கள் வரத்து குறைந்தது

தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கடல் மீன்கள் வரத்து குறைந்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி, வாழ்வியலை போதிக்கும் மையங்கள்!

சிறப்புக் குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்மாணிக்கும் வகையில் அவா்களுக்கு வாழ்வியலையும் சிறப்பு பயிற்சி மையங்கள் போதிக்கின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் பெற்றோரிடையே நம்பிக்கையையும், பெரு... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி!

காட்பாடி அருகே நண்பா்களுடன் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த சேனூரைச் சோ்ந்த பிரதீப்(17). இவா் 10-ஆம் வகுப்பு படித்துள்ளாா். நண்பா்களுடன் சனிக்கிழமை வீரக்கோயில்... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 538 பேருக்கு வீடு கட்ட ஆணை! ஆட்சியா் வழங்கினாா்!

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த 538 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்ற... மேலும் பார்க்க