செய்திகள் :

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நபர் மரணம்!

post image

24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (வயது 88),14 வயது சிறுவனாக இருந்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் முக்கிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த அறுவைச் சிகிச்சைக்காக பிறரது ரத்தம் அவருக்கு தானமாக வழங்கப்பட்டதினால், தானும் வளர்ந்தவுடன் ரத்த தானம் வழங்குவதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1954 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில் ரத்த தானம் வழங்கத்துவங்கியபோது அவரது ரத்தத்தில் அறியவகை ’ஆண்டி டி’ எனும் நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பாற்றலானது கர்ப்பிணி பெண்களின் கருவிலுள்ள குழந்தைக்கு தாயிடமிருந்து வரும் ஆபத்தான ஆண்டிபாடிகளை தடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஹாரிசன் அன்று முதல் தனது வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

இதையும் படிக்க: ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 81ஆம் வயதில் ரத்த தானம் வழங்குவதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட ஹாரிசன் அதுவரை 1,173 முறை ரத்த தானம் வழங்கியுள்ளார். அதன்மூலம், சர்வதேச அளவில் அவர் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், 2005 ஆண்டு முதல் உலகிலேயே அதிகளவிலான ரத்த பிளாஸ்மாக்களை வழங்கிய சாதனைப் பட்டத்தை இவர் தக்கவைத்திருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்க நபர் ஒருவர் இந்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், ‘எ மேன் வித் கோல்டன் ஆர்ம்’ அதாவது தங்கக் கரம் கொண்ட மனிதர் என வர்ணிக்கப்பட்ட ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று ஆஸ்திரேலியாவின் சௌத் வேல்ஸ் நகரத்தில் தனது 88 ஆம் வயதில் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் நேற்று (மார்ச்.3) தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலிய செஞ்சிலுவை இயக்கத்துடன் இணைந்து அந்நாட்டு ஆய்வாளர்கள் ஹாரிசனின் ரத்ததில் இயற்கையாகவே இருந்த நோய் எதிர்ப்பாற்றலை செயற்கை முறையில் ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நா... மேலும் பார்க்க

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்... மேலும் பார்க்க

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க