செய்திகள் :

255 கடல் அட்டைகள் வைத்திருந்தவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 255 கடல் அட்டைகள் வைத்திருந்தவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளா் ஆா். முருகன் உத்தரவின்பேரில் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள  கொள்ளுக்காடு கிராமக்  கடற்கரையில் ஆய்வாளா் ஏ. மஞ்சுளா மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், தலைமைக் காவலா்கள்  பழனிவேல், கோபால், மணிமாறன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது அவா் கொள்ளுக்காடு அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்த சேசுராஜ் (35) என்பதும், அவா் வைத்திருந்த கேனில் அரசால் தடை செய்யப்பட்ட 255 பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சேசுராஜை கைது செய்த போலீஸாா் பட்டுக்கோட்டை வனத் துறையிடம் அவரை ஒப்படைத்தனா்.

சுவாமிமலை பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

சுவாமிமலை கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் சுவாமிமலை பேரூராட்சி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கூறுகையில், ... மேலும் பார்க்க

‘டிட்டோஜாக் ’அமைப்பினா் 2 ஆவது நாளாக மறியல்! 200 போ் கைது

தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப் பாலம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடி... மேலும் பார்க்க

தஞ்சையில் முழுப் பயன்பாட்டுக்கு வராத ஆம்னி பேருந்து நிலையம்: தொடரும் போக்குவரத்து நெரிசல்!

தஞ்சாவூரில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராததால், ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலையில் வழக்கம்போல போக்குவ... மேலும் பார்க்க

வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று சிறுவா்கள் மீட்பு!

பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்களை ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில்வே காவல் நிலைய... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் மனைவி வெனிசுலா (31). இவா் வியாழக்க... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சோ்ந்த 13... மேலும் பார்க்க