செய்திகள் :

3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

post image

மும்பை: உலக சந்தைகள் நேர்மறையாக வர்த்தகமான நிலையில் உள்ளூர் சந்தையில் ரியல் எஸ்டேட் தவிர மற்ற அனைத்து துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை கொள்முதல் செய்ததன் காரணமாக இந்திய குறியீடுகள் மூன்று நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 230.17 புள்ளிகள் உயர்ந்து 80,967.68 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70.25 புள்ளிகள் உயர்ந்து 24,612.75 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 260.74 புள்ளிகள் உயர்ந்து 80,998.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 24,620.20 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், எடர்னல், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்தன.

நிஃப்டியில் எடர்னல், ஜியோ ஃபைனான்சியல், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டிரெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

துறை ரீதியாக, பிஎஸ்இ ரியாலிட்டி குறியீடு 0.7 சதவிகிதம் சரிந்தது, அதே நேரத்தில் தொலைத்தொடர்பு, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை அதிகரித்தன.

என்விடியா மற்றும் பிற சிப்மேக்கர்களில் லாபம் உயர்ந்ததையடுத்து நேற்றை வர்த்தகத்தில் அமெரிக்க பங்கு குறியீடுகள் உயர்ந்தன. அதே வேளையில் கட்டணத் திட்டங்கள் குறித்து மேலும் தெளிவு பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளுக்காக காத்திருந்தனர்.

தொழில்நுட்ப பங்குகளால் ஆசிய பங்குகள் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குகள் சிஏசி மற்றும் டிஏஎக்ஸ் தலா 1 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமானது.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீடெய்ல் பங்குகள் 6.2% பங்குகள் பிளாக் டீலில் கைமாறியதால் 10% வரை சரிந்தன. பிளாக் டீலில் 1.4% பங்குகள் கைமாறியதால் அல்கெம் லேபரேட்டரீஸ் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

நாள்பட்ட தோல் நோய் மருந்து சோதனைகளில் பலன் அளிக்காததால் சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட் பங்குகள் 20% வரை சரிந்து முடிந்தன.

கார்டன் ரீச், கிளாக்சோ ஸ்மித்க்லைன் பார்மா, ஏபிஎல் அப்பல்லோ, லாயிட்ஸ் மெட்டல்ஸ், எஸ்பிஐ கார்டுகள், அனுபம் ரசாயன், ராடிகோ கைதன், ஹிட்டாச்சி எனர்ஜி, சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அஸ்ட்ராஜெனெகா பார்மா, பாரதி ஹெக்ஸாகாம், சிசிஎல் தயாரிப்புகள், சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தன.

ஐபிஓ பட்டியலில், ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகமான பிறகு 5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

இதையும் படிக்க: சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க