செய்திகள் :

3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

post image

அமெரிக்க அதிபராக தன்னை 3-ஆவது முறையாகவும் தேர்ந்தெடுக்க அமெரிக்க குடிமக்கள் விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு 3-ஆவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது சாத்தியமா?

அமெரிக்க நாட்டு அரசமைப்பின் 22-ஆவது சாசனப் பிரிவின் படி, ’எந்தவொரு நபரும் அமெரிக்க அதிபர் பதவிக்கு 2 முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கெனவே இருமுறை வகித்த ஒருவர், மூன்றாவது முறை போட்டியிட வேண்டுமெனில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அரசமைப்பு சாசனப்பிரிவில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமெனில், ஆளுங்கட்சிக்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். இல்லையெனில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் 2 பங்கினரின் ஆதரவு இந்த சட்டத்திருத்தத்துக்கு இருக்க வேண்டும். ஆனால், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சிக்கு அத்தனை பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லை.

எனினும், டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராவதற்கு இன்னொரு வழியும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதன்படி, அவர் அடுத்த தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றால், அதன்பின், அப்போதைய அதிபராக பதவிவகிப்பவர் தமது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ராஜிநாமா செய்துவிட்டாரெனில், துணை அதிபர்(டிரம்ப்) அதிபராக பதவி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இதற்கெல்லாம் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே... ஏனெனில், 12-ஆவது சாசனப்பிரிவின் படி, எவரொருவர் அதிபர் பதவிக்கு மீண்டும், அதாவது 3-ஆவது முறையாக போட்டியிட முடியாதோ அதேபோல, அவர் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட தகுதியற்றவராகிவிடுகிறார் என்பதை தெளிவாக்குகிறது.

தற்போது 78 வயதாகும் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும்போது, அவருக்கு 82 வயதாகிவிடும். இதன்மூலம், அமெரிக வரலாற்றில் முதுமையான அதிபர் என்கிற பெருமை டிரம்ப்புக்கு போய் சேரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க