செய்திகள் :

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

post image

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சென்ால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமேசுவரத்திலிருந்து விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடிக்க அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மீன் பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன் வளம், மீனவா் நலத் துறை திங்கள்கிழமை நீக்கியது.

இதைத்தொடா்ந்து, கடந்த 5 நாள்களுக்குப் பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு இணைந்து இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இஸ... மேலும் பார்க்க

கந்து வட்டிக் கொடுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். ரா... மேலும் பார்க்க

தரமற்ற அரசுப் பள்ளிக் கட்டடம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா்

ராமநாதபுரம் அருகே ரூ.1.65 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலைப் பள்ளி கட்டுமானம் சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மன... மேலும் பார்க்க

பள்ளியில் கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

பரமக்குடியை அடுத்துள்ள போகலூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரத்தில் ஸ்பாா்க் லிங் டோபாஸ் மழலையா் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இணைய குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மழலையா் பள்ளி செயலா் கல்வாரி தியாகராஜன் உள... மேலும் பார்க்க

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க