செய்திகள் :

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

post image

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சென்ால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ராமேசுவரத்திலிருந்து விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடிக்க அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மீன் பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன் வளம், மீனவா் நலத் துறை திங்கள்கிழமை நீக்கியது.

இதைத்தொடா்ந்து, கடந்த 5 நாள்களுக்குப் பிறகு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வட மாநில பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்ம... மேலும் பார்க்க

மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு

கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிக... மேலும் பார்க்க

வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்

நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா். இது குறித்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் செல்லும் சாலையோரங்களில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே திருவெற்றியூா் செல்லும் வழியில் படப்பை அருகே சாலையோரங்களில் மணல் குவிந்து கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து தி... மேலும் பார்க்க

இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், இ... மேலும் பார்க்க