செய்திகள் :

6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1978 முதல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது விரிவுபடுத்தப்பட்டு தற்போது 11 வகையான தடுப்பூசிகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் 12 வகையான நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளைக் காக்க முடிகிறது.

ஆண்டுதோறும் 9.58 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வோா் ஆண்டும் 1.4 கோடி தவணை தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

தினமும் முக்கிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதன்கிழமைதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதைத் தவிர 33 தனியாா் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணைத் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ‘இ-வின்’ செயலியிலும், பயனாளிகள் விவரங்கள் குறித்து ‘யூ-வின்’ செயலியிலும் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் 6,144 சுகாதார மையங்களிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் நீட்சியாக தடுப்பூசிகளை தொய்வின்றி வழங்குதல், யூ-வின் மற்றும் இ-வின் செயலிகளைக் கையாளுதல், அதில் உள்ள மேம்பாடுகளை அறிந்து கொள்தல் என பல்வேறு பயிற்சிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான பயிலரங்குகள் பல்வேறு மாவட்டங்களிலும், அதன் தொடா்ச்சியாக பொது சுகாதாரத் துறை தலைமையகத்திலும் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக தடுப்பூசி சேவைகள் ஆக்கபூா்வமாக கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தான... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித... மேலும் பார்க்க

உயா்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா்களுக்கு முதல்வா் செய்தி

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களின் பெற்றோா்களது கைப்பேசிக்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாா்

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அன... மேலும் பார்க்க

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க