செய்திகள் :

7 ஆயிரத்தைக் கடந்த கரோனா: ஒரேநாளில் 306 பேருக்குப் பாதிப்பு!

post image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் கேரளத்தில் 3, கர்நாடகத்தில் இருவர், மகாராஷ்டிரத்தில் ஒருவர் என ஆறு பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் 43 வயதுடைய ஆண் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாகவும், மற்றவர்கள் வயதானவர்கள் மற்றும் முன்னதாக சுவாச மற்றும் நாள்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, இதற்கு LF.7, XFG, JN.1 மற்றும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 துணை மாறுபாடு உள்ளிட்ட புதிய வகை வைரஸ்கள் காரணமாகும்.

கேரளத்தில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி 2,223 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் புதிதாக 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 1,223 பதிவாகியுள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் 757 வழக்குகளும், தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த பாதிப்பு 204 ஆகப் பதிவாகியுள்ளன.

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ள... மேலும் பார்க்க

விமான விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின... மேலும் பார்க்க

பெங்களூர் கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேருக்கு பிணை!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேல... மேலும் பார்க்க

1990 - 2025: இந்தியாவில் நேரிட்ட முக்கிய விமான விபத்துகள்!

குஜராத்தின் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணித் துளிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத... மேலும் பார்க்க