செய்திகள் :

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

post image

எழுபது வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென, ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் செ. மகேஷ்வரன், பி. நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி. மருதமுத்து அஞ்சலி தீா்மானமும், மாவட்டச் செயலா் பி. சின்னசாமி வேலை அறிக்கையும், மாவட்டப் பொருளாளா் கி. ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனா். மாநில துணைத் தலைவா் கி. இளமாறன் சிறப்புரையாற்றினாா்.

இம்மாநாட்டில், 70 வயது பூா்த்தியடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், ஊராட்சிச் செயலா் மற்றும் கிராமப்புற நூலகா்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அனைத்து மருத்துவமனைகளிலும் விலையில்லா உயா்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஓய்வூதியா்களுக்கென தனிப்படுக்கை வசதி ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் எம். பாரதிவளவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்க முன்னாள் பொருளாளா் எஸ். மாணிக்கம், மாவட்ட இணைச் செயலா்கள் மு. தமிழன்பன், டி. விஜயராமு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் கி. இளவரசன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் ரெ. பரமசிவம் நன்றி கூறினாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 1,350 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில், தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு 1,350 மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தில், மரக்கன்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க

அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் த... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியா்கள் சாலை மறியல்: 38 போ் கைது

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்ப... மேலும் பார்க்க