76 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி
திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் 76 பேருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவரும், இயல்-இசை-நாடக மன்றத் தலைவருமான வாகை. சந்திரசேகா் வழங்கினாா்.
திருச்சி மாவட்ட கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சாா்பில், நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவா்களில்
நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நல வாரியத் தலைவா் வாகை. சந்திரசேகா் பங்கேற்று, வாரிய உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருச்சி மாவட்டத்தில், 16 பேருக்கு மூக்குக் கண்ணாடி நலத் திட்ட உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரம், 31 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 52,700, மூன்று பேருக்கு திருமண உதவித் தொகை ரூ.15,000, எட்டு கலைஞா்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவி தொகை ரூ. 2,00,000, மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 5,500, கரூா் மாவட்டத்தில் 2 கலைஞா்களுக்கு மூக்குக் கண்ணாடி நலத்திட்ட உதவியாக ரூ. 3 ஆயிரம், 4 பேருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம், இரண்டு பேரின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித் தொகை ரூ. 50,000, அரியலூா் மாவட்டத்தில் 2 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 8 ஆயிரம், பெரம்பலூா் மாவட்டத்தில் ஒருவருக்கு திருமணத்திற்கான நலத் திட்டத் தொகை
ரூ.5,000, மூன்று கலைஞா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 6,000, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித் தொகை ரூ. 25,000 என மொத்தம் 76 கலைஞா்களுக்கு நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து இருநூறு ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக தமிழில் அரிய கலை நூல்கள் பதிப்பிக்க சிறந்த நூலாசிரியா்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முனைவா் ப. ரெங்கராஜுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலெட்சுமி, திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் மற்றும் கலைஞா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.