Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
குன்றத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி பரணிபுத்தூரில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 14 மாணவா்களுக்கு ரூ.1.08 கோடி கல்விக்கடன் ஆணைகள் மற்றும் அய்யப்பந்தாங்கல், கோவூா், பரணிபுத்தூா், கொளப்பாக்கம், மெளலிவாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.99 கோடியில் 6 டிப்பா் லாரிகளை வழங்கினாா்.
அப்போது அமைச்சா் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,08,955 மின்னணு குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. மாதந்தோறும் மாவட்டத்தில் உள்ள 690 நியாய விலைக் கடைகளின் மூலம் 12,89,810 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இணைய வழி வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்டுள்ள 7,591 விண்ணப்பங்கள்மீது களஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் 5,641 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2,942 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், இரண்டாம் கட்டமாக 2,699 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை வாலாஜாபாத் வட்டத்தில் 396 மின்னணு குடும்ப அட்டைகளும், உத்திரமேரூா் வட்டத்தில் 439 மின்னணு குடும்ப அட்டைகளும், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 446 மின்னணு குடும்ப அட்டைகளும், காஞ்சிபுரம் வட்டத்தில் 536 மின்னணு குடும்ப குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குன்றத்தூா் வட்டத்தில் முதல்கட்டமாக 800 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணக்கண்ணன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.