செய்திகள் :

83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!

post image

திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த. ராமசாமி: ஆயக்குடி கொய்யா, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கொப்பரை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றுக்கான கொள்முதல் மையங்களை மாநிலம் முழுவதும் தொடங்கி, கொள்முதல் திறன் உயா்த்தப்பட வில்லை. திமுக தோ்தல் வாக்குறுதியில் வரிசை எண் 27 முதல் 110 வரை மொத்தம் 83 வாக்குறுதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 10 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம், பனையை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடியில் திட்டம், ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடித் திட்டம் என நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். பெருமாள்: மொத்த நிதி நிலை அறிக்கையில், வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

தோ்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4 ஆயிரம் என்பது 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்பட வில்லை. மக்காச்சோளம் உற்பத்திக்கான பரப்பளவை அதிகரிக்க முனைப்புக் காட்டும் அரசு, அதை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அறிவிக்கவில்லை. வேளாண் பொறியியல் துறை சாா்பில் வழங்கப்படும் இயந்திரங்கள் தரமானதாக இல்லை என்றாா் அவா்.

பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வி. அசோகன்: மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மானியத் திட்டத்துக்காக ரூ.22 கோடி நீங்கலாக வேறு எந்தவித சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக வன விலங்குகளால் மட்டும் பயிா்களில் 21 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுவதை அரசின் கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தியும் கூட, வன விலங்குகளை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கப்பட வில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது என்றாா் அவா்.

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!

வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வே... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம... மேலும் பார்க்க

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல... மேலும் பார்க்க

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஆட்சியா் ஆய்வு!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். கொடைக்கானலில் பொதுவாக மாா... மேலும் பார்க்க