செய்திகள் :

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

post image

கேரளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 4,645 கோடி நிதியளிக்க உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களில் மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க, தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் நீதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

11 நகரங்களுக்கான நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை திட்டத்தின் (UFRMP) கட்டம் 2-க்கும் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. போபால், புவனேஸ்வர், குவாஹாட்டி, ஜெய்ப்பூர், கான்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், இந்தூர் மற்றும் லக்னோவுக்கு மொத்தம் ரூ. 2444.42 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

High-Level Committee (HLC), under the chairmanship of Union Minister Amit Shah, approves a number of mitigation, recovery & reconstruction projects for 9 states having total outlay of Rs. 4645.60 crore

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதி... மேலும் பார்க்க

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா்உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார். இதுகுற... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரையிலான காலகட்டத்தில் மாணவர் தற்கொலைகள் 65 சதவிக... மேலும் பார்க்க