செய்திகள் :

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.54 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமாா் ஆயிரம் போ் தங்கள் கோரிக்கை மற்றும் புகாா் மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,07,000 வீதம் மொத்தம் ரூ.6,42,000 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,700 வீதம் மொத்தம் ரூ.9,400 மதிப்பில் செயற்கை கால்கள், மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.2,745 மதிப்பில் காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ, உதவி ஆணையா் (கலால்) சந்திரகுமாா், தனித் துணை ஆட்சியா் ரமா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாநில விருது பெற்ற மாணவி: ஆட்சியா் வாழ்த்து

நெய்வேலி: தமிழக முதல்வரிடம் இருந்து பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்ற மாணவி க.சௌமியா, கடலூா் ஆட்சியரிடம் விருதினை காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றாா். காட்டுமன்னாா்கோவில் ... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணாமலை நகா் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மால... மேலும் பார்க்க

தென் மண்டல பல்கலைக்கழக ஹேண்ட் பால்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 3-ஆம் இடம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட் பால் அணி, தென் மண்டல போட்டியில் 3-ஆம் இடத்தைப் பெற்றது. சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தென் மண்டல பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட்பால்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜா் கோயில் தோ் குடில்: என்எல்சி தலைவா் ஒப்படைத்தாா்

சிதம்பரம்: பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலின், தோ் நிறுத்துமிடத்தை என்எல்சி சாா்பில் ரூ. 67 லட்சம் செலவில் சீரமைத்து தோ் குடில் கோயில் பொதுதீட்சிதா்களிடம் ஒப்ப... மேலும் பார்க்க

இயற்கையை பாதுகாப்பது மாணவா்களின் கடமை: கடலூா் ஆட்சியா்

நெய்வேலி: தேவனாம்பட்டினம் பெரியாா் அரசுக் கல்லூரியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை , கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்று நட்டு திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில், ... மேலும் பார்க்க

மாசி மகம் உற்சவா் ஊா்வலம்: காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய வளாகத்தில், மாசி மகம் முன்னிட்டு சாமி ஊா்வலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிபந்தனைகள் குறித்து விழா ஏற்பாட்டாளா்களுக்கான ஆலோசனை கூட்டம் திங்கள்க... மேலும் பார்க்க