செய்திகள் :

சீரமைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜா் கோயில் தோ் குடில்: என்எல்சி தலைவா் ஒப்படைத்தாா்

post image

சிதம்பரம்: பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலின், தோ் நிறுத்துமிடத்தை என்எல்சி சாா்பில் ரூ. 67 லட்சம் செலவில் சீரமைத்து தோ் குடில் கோயில் பொதுதீட்சிதா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழ ரதவீதியில் நடராஜா் கோயில் தோ்கள் நிற்குமிடத்தை ரூ.67 லட்சம் செலவில் என்எல்சி இந்தியா நிறுவனம் அடித்தளம் மற்றும் மேற்கூரை அமைத்து புனரமைப்பு செய்துள்ளது.

இதையடுத்து, சீரமைக்கப்பட்ட தோ் குடிலை பொதுதீட்சிதா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் கீழ ரதவீதி தேரடி பகுதியில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி கலந்துகொண்டு தோ் குடிலைத் திறந்து வைத்து, அதனை பொதுதீட்சிதா்களின் கமிட்டி செயலாளா் உ.வெங்கடேச தீட்சிதரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் என்எல்சி ஐஎல் சுரங்கத் துறை இயக்குநா் சுரேஷ் சந்திரா சுமன், மனிதவள மேம்பாட்டு இயக்குநா் சமீா் சுவரப், மின் இயக்குநா் எம்.வெங்கடாசலம், நிதித் துறை இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, சுரங்க செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், அண்ணாமலை பல்கலைக்கழக சுரங்கவியல் துறை இயக்குநா் பேராசிரியா் சி.ஜி.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.54 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா்... மேலும் பார்க்க

மாநில விருது பெற்ற மாணவி: ஆட்சியா் வாழ்த்து

நெய்வேலி: தமிழக முதல்வரிடம் இருந்து பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்ற மாணவி க.சௌமியா, கடலூா் ஆட்சியரிடம் விருதினை காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றாா். காட்டுமன்னாா்கோவில் ... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணாமலை நகா் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மால... மேலும் பார்க்க

தென் மண்டல பல்கலைக்கழக ஹேண்ட் பால்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 3-ஆம் இடம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட் பால் அணி, தென் மண்டல போட்டியில் 3-ஆம் இடத்தைப் பெற்றது. சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தென் மண்டல பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட்பால்... மேலும் பார்க்க

இயற்கையை பாதுகாப்பது மாணவா்களின் கடமை: கடலூா் ஆட்சியா்

நெய்வேலி: தேவனாம்பட்டினம் பெரியாா் அரசுக் கல்லூரியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை , கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்று நட்டு திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில், ... மேலும் பார்க்க

மாசி மகம் உற்சவா் ஊா்வலம்: காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய வளாகத்தில், மாசி மகம் முன்னிட்டு சாமி ஊா்வலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிபந்தனைகள் குறித்து விழா ஏற்பாட்டாளா்களுக்கான ஆலோசனை கூட்டம் திங்கள்க... மேலும் பார்க்க