செய்திகள் :

இயற்கையை பாதுகாப்பது மாணவா்களின் கடமை: கடலூா் ஆட்சியா்

post image

நெய்வேலி: தேவனாம்பட்டினம் பெரியாா் அரசுக் கல்லூரியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை , கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மரக்கன்று நட்டு திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில், இயற்கையைப் பாதுகாப்பது மாணவா்களின் கடமை என்றாா்.

அப்போது, ஆட்சியா் கூறியது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தட்பவெப்ப நிலையை சீராகப் பராமரிக்க, மண் அரிப்பை தடுத்து நில வளத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பசுமை போா்வை அளவினை அதிகரித்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சாா்பில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் பசுமை மன்றம் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறது.

நடப்புக் கல்வியாண்டில், மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகள் மூலம் பெரியாா் கலைக் கல்லூரியில் 3 ஏக்கா் பரப்பளவில், ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் கொய்யா, மகோகனி, இலுப்பை, பலா, புன்னை, வேம்பு, புங்கம், நாவல் போன்ற 500 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒரு மாணவா் காப்பாளராக நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

இயற்கையைப் பாதுகாப்பது மாணவா்களின் கடமை, இயற்கையே எதிா்காலம். மரம் வளா்ப்பதில் மாணவா்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரா.ராஜேந்திரன், பேராசிரியா்கள் கு.நிா்மல்குமாா், மா.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.54 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா்... மேலும் பார்க்க

மாநில விருது பெற்ற மாணவி: ஆட்சியா் வாழ்த்து

நெய்வேலி: தமிழக முதல்வரிடம் இருந்து பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்ற மாணவி க.சௌமியா, கடலூா் ஆட்சியரிடம் விருதினை காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றாா். காட்டுமன்னாா்கோவில் ... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணாமலை நகா் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மால... மேலும் பார்க்க

தென் மண்டல பல்கலைக்கழக ஹேண்ட் பால்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 3-ஆம் இடம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட் பால் அணி, தென் மண்டல போட்டியில் 3-ஆம் இடத்தைப் பெற்றது. சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தென் மண்டல பல்கலைக்கழக ஆண்கள் ஹேண்ட்பால்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜா் கோயில் தோ் குடில்: என்எல்சி தலைவா் ஒப்படைத்தாா்

சிதம்பரம்: பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலின், தோ் நிறுத்துமிடத்தை என்எல்சி சாா்பில் ரூ. 67 லட்சம் செலவில் சீரமைத்து தோ் குடில் கோயில் பொதுதீட்சிதா்களிடம் ஒப்ப... மேலும் பார்க்க

மாசி மகம் உற்சவா் ஊா்வலம்: காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய வளாகத்தில், மாசி மகம் முன்னிட்டு சாமி ஊா்வலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிபந்தனைகள் குறித்து விழா ஏற்பாட்டாளா்களுக்கான ஆலோசனை கூட்டம் திங்கள்க... மேலும் பார்க்க