செய்திகள் :

Ashuthosh Sharma: "கடைசி வரை நான் நின்றால் எதுவும் நடக்கலாம் என்று நம்பினேன்" - ஆட்டநாயகன் அஷுதோஷ்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதுவும், டெல்லிக்கு 66-க்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்து, ஆட்டம் மெல்ல லக்னோ வசம் சென்றுகொண்டிருந்த நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மாவின் 66* (31) அதிரடி ஆட்டத்தால் டெல்லி வெற்றி பெற்றது.

அஷுதோஷ் சர்மா
அஷுதோஷ் சர்மா

தவறுகளிலிருந்து பாடம்

இந்த அதிரடி இன்னிங்ஸுக்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வாங்கியபின் பேசிய அஷுதோஷ் சர்மா, ``கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளை என்னால் கடைசி வரை நின்று வென்றுகொடுக்க முடியவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இதில் கவனம் செலுத்தியிருக்கிறேன்.

அஷுதோஷ் சர்மா
அஷுதோஷ் சர்மா

கடைசி ஓவர் வரை களத்தில் நான் நின்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்று நம்பினேன். விப்ராஜ் மிக அற்புதமாக விளையாடினார். தொடர்ந்து அடிக்குமாறு அவரிடம் நான் கூறினேன். அழுத்தத்திலும் அவர் நிதானமாக இருந்தார். இந்த விருதை என்னுடைய மென்டார் ஷிகர் தவானுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்." என்று கூறினார்.

கடந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷுதோஷ் சர்மா, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 3.8 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.இவர், 2... மேலும் பார்க்க

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ... மேலும் பார்க்க

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க