செய்திகள் :

Assam flood: 2.57 லட்ச மக்கள் பாதிப்பு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு - தொடரும் கனமழை

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ம் தேதி முதல் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.

இதன் விளைவாக, பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 21 மாவட்டங்களில் 2.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Assam flood
Assam flood

நேற்றைய இரவு நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பராக் பள்ளத்தாக்கையும், அதன் முக்கிய நகரமான சில்சாரில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்டார். பிரதமர் மோடி முன்னதாகவே மாநிலத்தின் நிலைமை குறித்து விசாரித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நான் அவருக்குத் தெரிவித்தேன். விரைவான நிவாரணம், மீட்பு பணிகளுக்கு நிர்வாகத்தை முடுக்கிவிட்டிருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவுவோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உறுதியுடன் இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் 511 நிவாரண முகாம்களில் 39,000 க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

Assam flood
Assam flood

மணிப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்திருக்கிறது. 3917 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அஸ்ஸம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் 5-ம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், அதன் பிறகு தீவிரம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Shine Tom Chacko : விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியி... மேலும் பார்க்க

RCB வரவேற்பு: கூட்டநெரிசல்; உடுமலை இளம் பெண் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பீட்டர் தினமும் குளிக்கச் செ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; கோயில் திருவிழாவில் சோகம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரிய... மேலும் பார்க்க

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம... மேலும் பார்க்க

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் - கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில... மேலும் பார்க்க