செய்திகள் :

BJP எம்.பி. மனைவியை ஏமாற்றிய கும்பல்; ரூ.14 லட்சம் பறிப்பு - நடந்தது என்ன?

post image

நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் பெண்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை பறித்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் நன்கு படித்து பெரிய வேலையில் இருப்பவர்கள் கூட டிஜிட்டல் கைது நடவடிக்கையில் சிக்கி இருக்கின்றனர். இப்போது பா.ஜ.க எம்.பி. ஒருவரின் மனைவியும் டிஜிட்டல் கைது நடவடிக்கையில் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்.

கர்நாடகா மாநில பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பி.சுதாகர் மனைவி பிரீத்திக்கு கடந்த மாதம் 26ம் தேதி மர்ம நபர் போன் செய்து தான் மும்பை சைபர் பிரிவு போலீஸில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆவணங்களைப் பயன்படுத்தி சத்பத் கான் என்பவர் கிரெடிட் எடுத்து சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Representational Image
Representational Image

மோசடியில் ஈடுபட்ட கான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் உங்களை அடையாளம் கண்டதாகவும், அதனை உறுதி செய்ய வீடியோ காலில் வரும்படி கேட்டுக்கொண்டார். வீடியோ காலில் வரவில்லையெனில் உங்களது ஆவணங்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து பிரீத்தி வீடியோ காலில் வந்தார்.

அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் கிரிமினல்கள் பிரீத்தியிடம் அவரது வங்கிக்கணக்கு விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதைத் தெரிந்து கொண்ட பிறகு உங்களது கணக்கை சரி செய்ய ரூ.14 லட்சத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதோடு விசாரணைக்குப் பிறகு அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் பிரீத்தி அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு ரூ.14 லட்சத்தை அனுப்பினார். பணத்தை அனுப்பியவுடன் சைபர் கிரிமினல்கள் போன் இணைப்பை துண்டித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்தே தான் மோசடி செய்யப்பட்டது பிரீத்திக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிரீத்தி இது குறித்து சைபர் பிரிவில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

திருமணமான நபருடன் காதல்; உயிரிழந்த கல்லூரி மாணவி - பின்னணி என்ன ?

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக, விருத்தாசலத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: நாடோடி சமூக பள்ளி மாணவனைத் தாக்கிய தலைமை ஆசிரியர்; இருவர் கைது; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாவீரன் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நாடோடி பழங்குடி வகுப... மேலும் பார்க்க

ஒயின் ஷாப்பில் பிடிபட்ட நோட்டு; அலர்ட்டான போலீஸ்; கைதான கும்பல் - கரூர் அதிர்ச்சி

கரூரில் கடந்த 9 - ம் தேதி தாந்தோன்றிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன் (வயது 52) என்பவர் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொ... மேலும் பார்க்க

UP: "உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல" - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராகுல் பாபு. இவர் இரவில் எமர்ஜென்சி பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்நேரம் 4 போலீஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந... மேலும் பார்க்க

மும்பை: '100 சிம் கார்டுகள், ஆபாச மெசேஜ், பொது இடத்தில் பாலியல் தொல்லை' - இளைஞருக்கு போலீஸ் வலை

சிலர் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் வரக்கூடிய நட்பு கோரிக்கையை ஏற்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒ... மேலும் பார்க்க