செய்திகள் :

Blair House : பிரதமர் மோடி அமெரிக்காவில் தங்கும் உலகின் பிரத்யேகமான ஹோட்டல்! - அப்படி என்ன சிறப்பு?

post image

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். இன்று அமெரிக்காவில் தரையிறங்கிய பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையின் சர்வதேச விருந்தினர்கள் தங்கும் பிளேர் ஹவுஸ் ( Blair House) என்ற ஹோட்டலில் தங்குகிறார்.

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த ஹோட்டல் பற்றி காணலாம்.

உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த ஹோட்டல்

பிளேர் ஹோட்டலை உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த ஹோட்டல், ``world's most exclusive hotel" என்று அழைக்கின்றனர்.

இங்கு தங்கிச் சென்ற பிரபலமானவர்களின் பட்டியல் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அமெரிக்க ஜனாதிபதிகள் ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன், இந்திய பிரதமர் இந்திரா காந்தி முதல் உலக தலைவர்கள், அரச குடும்பத்தினர் எனப் பலர் இங்கு தங்கியுள்ளனர்.

பிளேர் ஹவுஸ்

வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவிலேயே அதற்கு எதிராக பிளேர் ஹோட்டல் அமைந்துள்ளது. 1651, பென்சில்வேனியா அவென்யு என்பது இதன் முகவரி. 1824ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டல் ஆரம்பம் முதல் வெள்ளை மாளிகையின் விருந்தினர் வீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தங்குவது அமெரிக்காவின் விருந்தோம்பலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

வசதியான இந்த ஹோட்டல் 70,000 ச.அடி பரப்பில் அமைந்துள்ளது. இது ஒரே கட்டடமாக இல்லாமல் நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டவுன்ஹவுஸ்களால் ஆனது.

இதில் 119 அறைகள், 14 விருந்தினர் அறைகள் 35 குளியலறைகள், உணவருந்தும் அறை, பிரத்யேகமான சலூன், ஓவிய அறை, நூலகம் ஆகியவை உள்ளன.

பழமையான மர ஃபர்னிச்சர்கள், கலைப்பொருட்களால் ஆன அலங்காரங்கள், அமெரிக்க வரலாற்றை சித்திரிக்கும் ஓவியங்கள், கலைப்படைப்புகளால் நிறைந்திருக்கிறது பிளேர் ஹோட்டல்.

பல வரலாற்றுத் தலைவர்களின் சந்திப்பும், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வுகளும் இங்கு நடந்துள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இங்கு அதிகமான உலக தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதிபர் ட்ரூமேன் கொலை முயற்சி இங்கு நடைபெற்றது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி பிளேர் ஹோட்டலில் இந்திய கொடி அமைக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் இந்த பயணம் ட்ரம்ப் மோடியிடையே 2016-20 காலத்தில் இருந்த நட்பை மீட்டுருவாக்கம் செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க