செய்திகள் :

Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?

post image

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். முசமிலும் அப்போது மாடலிங் துறையில் வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் பாட்காஸ்டர் சித்தார்த் கண்ணன் உடனான உரையாடலில் முசாமில் தீபிகா உடனான 2 ஆண்டு டேட்டிங் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Muzamil Ibrahim
Muzamil Ibrahim

தீபிகாதான் தன்னை வெளியில் அழைத்ததாகவும், அப்போது கையில் அதிக பணம் இல்லாததால் ரிக்‌ஷாவில் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

நான் Deepika Padukone -ன் மிகப் பெரிய ரசிகன்

"நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள், அவரை எல்லோருக்கும் தெரியும்." எனக் கூறியுள்ளார் இப்ராஹிம்.

Deepika Padukone
Deepika Padukone

மேலும் தீபிகாவின் வளர்ச்சி பற்றி பேசிய அவர், "அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். அவர் சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரிவதில்லை. நான் அவரது பெரிய ரசிகன். அவரது படங்களை விரும்பி பார்க்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறார், அவரது திருமணத்துக்கு முன்பு வரை நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு." எனக் கூறியுள்ளார்.

`பணம் இல்லாமலும் மகிழ்ச்சியாக இருந்தோம்'

அதிக பணம் இல்லாத நாள்களில் டேட்டிங் சென்றது குறித்து, "அப்போது சிறுவர்களாக இருந்தோம். மழையில் ரிக்‌ஷாவில் டேட்டிங். அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அதன் பிறகு நான் ரிஷாவில் டேட்டிங் சென்றதே இல்லை என்பதால் அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்." எனப் பேசியுள்ளார்.

மேலும், அவரே தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார் மாடலிங்கில் இருந்து, இப்போது நடிகராக வளர்ந்துள்ள முசமில் இப்ராஹிம்.

Sitaare Zameen Par: "இதனால் நஷ்டம் ஏற்படலாம்; ஆனால்..." - OTTயில் படத்தை வெளியிட மறுத்த ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடித்த சிதாரே ஜமீன் பர் படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தை ஆமீர் கான் பெரிதும் நம்பி இருக்கிறார். இதற்காகத் தொடர்ச்சியாகப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஆ... மேலும் பார்க்க

Aamir Khan: `மகாபாரதம்' படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? - நடிகர் ஆமீர் கான் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது தனது புதிய படமான சிதாரே ஜமீன் பர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிவி ஷோ ஒன்றி... மேலும் பார்க்க

Madhavan: தகர்ந்த ராணுவ கனவு; கைகொடுத்த சினிமா; மாதவன் நடிகரான கதை!

நடிகர் ஆர்.மாதவன் ஆரம்பத்தில் இந்தி படங்களில் நடித்தபோதிலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆர்.மாதவன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக மாறியது வித்தியாசமான ஒரு அனுபவம்... மேலும் பார்க்க

"கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவி... மேலும் பார்க்க

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க