செய்திகள் :

Dhoni: "எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்..." - நெகிழும் சஞ்சு சாம்சன்

post image

ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்கும் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், தோனியுடனான தனது பிணைப்பு குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஊடகம் ஒன்றுக்குப் பேசிய சஞ்சு சாம்சன், ``ஒருவருக்கு அறிவுரை தருவதற்குப் பதிலாக, ஒரு இளைஞர் எப்படி கிரிக்கெட் விளையாட விரும்புகிறான், அவரின் எதிர்பார்ப்பு என்ன, அவருக்கு எத்தகைய ஆதரவை நான் அளிக்க வேண்டும் போன்றவற்றை முதலில் புரிந்துகொள்ள விரும்புகிறேன். பின்னர், அணிக்கான தேவைகளின் அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பேன். வைபவ் மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மைதானத்துக்கு வெளியேதான் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் விளையாட்டுத் திறனை மக்கள் ஏற்கனவே பாராட்டி வருகின்றனர். இதற்கு மேல், வேறு என்ன வேண்டும்" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து தோனி குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், ``ஒவ்வொரு இந்திய இளம் கிரிக்கெட் வீரரும் தோனியுடன் இருக்க விரும்புவது போல, நானும் எப்போதும் மஹி பாயுடன் இருக்கவே விரும்பினேன். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும், தோனி எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பது பற்றி அவரிடமே அமர்ந்து பேச விரும்பினேன். அது என்னுடைய கனவு. ஷார்ஜாவில் சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் எங்கள் அணி விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது.

தோனி - சஞ்சு சாம்சன்
தோனி - சஞ்சு சாம்சன்

அந்தப் போட்டியில் நான் சிறப்பாக விளையாடி, சுமார் 70 - 80 ரன்கள் அடித்தேன். ஆட்டநாயகன் விருதும் பெற்றேன். அதன் பிறகு, நான் தோனியைச் சந்தித்தேன். அதன்பிறகு எங்கள் இருவரிடையேயான பிணைப்பு வளர்ந்தது. இப்போதும் நான் அவரை அடிக்கடி சந்திப்பேன். நேற்று கூட நான் தோனியைச் சந்தித்தேன். முன்பு அவரைத் தொலைவிலிருந்து பார்த்துவந்த நிலையில், இப்போது நிகழ்ச்சிகள் மற்றும் ஷூட்டிங்கில் அவருடன் அமர்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. என்னுடைய கனவுகளில் நான் வாழ்வது போல உணர்கிறேன்." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்கள்!

வெஸ்ட்இண்டிஸ்அணியின் முன்னால்லெஜண்டரிவேகப்பந்து வீச்சாளர் ஆண்டிராபர்ட்ஸ், இந்தியாவுக்கு சாதகமாகசாம்பியன்ஸ்டிராபிதொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய வீரர்கள் ஒரே மைதானத்தில் விளையாடியதைக்கண்டித்துள்ளா... மேலும் பார்க்க

KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு... முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செய... மேலும் பார்க்க

Rahul Dravid: ஊன்றுகோலுடன் களத்துக்கு வந்த டிராவிட்... இணையத்தில் வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன?

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சாம்பியன்ஸ் ட்ராபி... மேலும் பார்க்க

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் ... மேலும் பார்க்க