செய்திகள் :

Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

post image

இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.

இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்தும் காசா மனிதாபிமான அறக்கட்டளையில் உதவிகளைப் பெறுவதற்காக சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளது ஐ.நா.சபை. இந்தத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Gaza - காஸா

மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து காசாவுக்குள் உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து வைத்திருந்த இஸ்ரேல், புதிய மனிதாபிமான உதவிகள் வழங்கும் முறையைக் கொண்டுவந்திருக்கிறது.

தற்போது காசாவுக்கு செல்லும் உதவிகள் அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (Gaza Humatarian Foundation - GHF) மூலமே செய்யப்படுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகள் போதுமானதல்ல, ஆபத்தானது மற்றும் மனிதாபிமான பாரபட்சமின்மை கொள்கைகளை மீறுகிறது எனக் கூறி இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது ஐ.நா.

GHF
GHF

திங்கள் (16.06.2025) அன்று நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பும் இதுபோல உதவி மையங்கள் அருகில் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் தரப்பினர் தாக்குதல்களைத் தூண்டியதாக விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

"அது ஒரு பொறி..."

திங்கள் இரவு GHF வெளியிட்ட அறிக்கையில், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நான்கு மையங்களில் உணவுகளை விநியோகித்ததாகக் கூறியிருக்கிறது.

இறந்தவர்கள மற்றும் காயமடைந்தவர்கள் ராஃபாவில் உள்ள செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பசியில் வாடி வந்த மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என அல்ஜசீரா தளம் தெரிவிக்கிறது.

"நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் அது ஒரு பொறியாக மாறி, கொலை செய்யப்படுகிறோம். யாரும் அங்கு செல்ல வேண்டாம் என நான் அறிவுறுத்துகிறேன்" என உதவிகளைப் பெற முயன்று உயிருடன் திரும்பிய அகமது ஃபயாத் என்ற நபர் கூறியதாக ராய்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

கொள்ளுத் தாத்தா பிறந்த நாள் முதலே... கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தில் இன்பநிதி!

கடந்த ஜூன் 3ம் தேதி தனதுகொள்ளுத்தாத்தாவின் பிறந்த நாளில் இருந்து கட்சி தொலைக்காட்சி தொடர்பான தன் பணியைத் தொடங்கி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்பேரனும் தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகனும... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran|Imperfect Show 17.6.2025

* இளைஞரைக் கடத்திய ADGP… கைது?* MLA ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி கண்டனம்? * ADGP Jayaram மீது ஒழுங்கு நடவடிக்கை - தமிழக காவல் துறை?* ஜெகன் மூர்த்தியிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை* பாமக குழப... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "ஒன்றிய அரசு நடத்தினாலும் மாநில அரசும் நடத்த வேண்டும்" - விஜய் வலியுறுத்தல்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-க்கு பிறகு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், அது குறித்து இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அத... மேலும் பார்க்க

Seeman: ``புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் தடை!’’ - சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார். நாதக'வின் உழவர் பாசறை சார்பில் நடத்த... மேலும் பார்க்க

மதுரை எய்ம்ஸ்: "இந்த ஒரு வீடியோ தயாரிக்க 10 வருஷமா?" - விமர்சித்த ஸ்டாலின்

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு, இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்து, 6 ஆண்டுகள் கடந்துவிட்டது.ஆனாலும், மதுரையில் இ... மேலும் பார்க்க