செய்திகள் :

Guru Mithreshiva: குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா! - நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

post image

குரு மித்ரேஷிவா எழுதிய ‘பணவாசம்’, ‘கருவில் இருந்து குருவரை’, ‘உனக்குள் ஒரு ரகசியம்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டுவிழா வரும் ஜூன் 27 ஆம் தேதி  மாலை சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இதில்  ‘பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் சம்பாதிக்கும் வழி!’ என்ற தலைப்பில் குரு மித்ரேஷிவா உரையாற்ற இருக்கிறார்.

இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில், தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி தலைமை தாங்க திரு. சைலபதி (உதவி ஆசிரியர், விகடன்) வரவேற்புரை ஆற்றுகிறார். 

குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா
குரு மித்ரேஷிவாவின் நூல் வெளியீட்டு விழா

* ‘பண வாசம்’ நூலை  பொருளாதார நிபுணர் திரு.வ.நாகப்பன்  வெளியிட  'நேச்சுரல்ஸ்' நிர்வாக இயக்குநர் திரு.சி.கே.குமரவேல், பெற்றுக்கொள்கிறார்.

* ‘கருவிலிருந்து குரு வரை’ நூலை திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட ஜோதிடர் திரு.கே.பி.வித்யாதரன் பெற்றுக்கொள்கிறார்.

*‘உனக்குள் ஒரு ரகசியம்’ நூலை திரைப்பட இயக்குநர் திரு. லிங்குசாமி வெளியிட பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் பெற்றுக்கொள்கிறார். இறுதியாக குரு மித்ரேஷிவா ஏற்புரை வழங்க திரு.முருகன்( ஆசிரியர், ஆனந்த விகடன்) நன்றியுரை ஆற்றுகிறார். 

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்களும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு  முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பதிவுக்கான லிங்க் - நூல் வெளியீட்டு விழா

Roja Muthiah Research Library Documentary | தமிழ் மரபின் வரலாற்று கருவூலம் | Vikatan

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது. ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ... மேலும் பார்க்க

5,00,000 நூல்கள், ஆவணங்கள் - ஒரு தமிழரின் சேகரிப்பில் உருவான தமிழ் அறிவு வளாகம்

தமிழ்ச் சமூகத்தின் வரலாறென்பது காலத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. தோண்டத் தோண்ட, நில அகழ்வுகள் உலகை வியக்க வைக்கும் நாகரிகத்துக்கு சான்றாதங்களை அள்ளி அள்ளித் தந்துகொண்டிருக்கின்றன. ஆயினும... மேலும் பார்க்க

Roja Muthiah Research Library-500000 நூல்கள், ஆவணங்களுடன் Tamil Knowledge Campus | Ananda Vikatan

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது. ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ... மேலும் பார்க்க