செய்திகள் :

Hon Son Doong: மனித காலடி தடமே படாத தனி ஒரு உலகம் - வியட்நாமின் மர்ம குகை பற்றித் தெரியுமா?

post image

பிரிட்டிஷைச் சேர்ந்த ஜேசன் மல்லின்சன், ரிக் ஸ்டன்டான், கிறிஸ் ஜ்வெல் ஆகிய மூவரும் அட்வெஞ்சர் பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். யாருமே பாதம் பதிக்காத இடத்துக்குள் துணிச்சலாக நுழையும் சாகசக்காரர்கள். 2009ம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாதத்தில் இந்த மூன்று நீச்சல் வீரர்கள் வியட்நாமுக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு வியட்நாமின் போங்க் நா கா பேங்க் தேசிய பூங்காவை அலசி ஆராயும் பணி வழங்கப்பட்டது. அப்போது சன் தூங் (Son Doong) குகையின் நீர்வழிப்பாதையை ஆராய்ந்துகொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அதுவரை யாரும் பார்த்திராத மிகப் பெரிய குகையுடன் அந்த நீர்வழிப்பாதை இணைவதைக் கண்டறிந்தனர்.

Hon Son Doong
Hon Son Doong

ஹாங் சன் தூங் எவ்வளவு பெரியது?

குகை என்றால் மனிதர்கள் குனிந்து செல்லும் அளவு குட்டையான பிளவாக இருக்கும் என்று தானே நினைத்திருப்பீர்கள்? இதன் சராசரி உயரம் 200 மீட்டர். சில இடங்களில் 503 மீட்டர் வரை உயரமானதாக இருக்கிறது.

175 மீட்டர் அகலமான இந்த குகை 9.4 கிலோமீட்டர் நீளமானது. உள்ளேயே தனி ஒரு நகரையே உருவாக்கும் அளவு இந்த குகையில் விசாலம் இருக்கிறது.

ஹாங் சன் துங் அருகில் உள்ள ஒரு குகையில் 5000 ஆண்டுகளுக்கும் முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஹாங் சன் துங்கில் அப்படி யாரும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை.

குகைக்குள் என்னென்ன இருக்கிறது?

மனித காலடித்தடமே படாமல் இருந்த அந்த குகை ஒன்றும் வெறுமையாக இல்லை. 200 மீட்டர் இறங்கி வரும் திறன்கொண்ட குரங்குகள் குகைக்குள் உள்ள காட்டுக்கு வந்து நத்தைகளை உண்கின்றன.

அணில், எலி, வௌவால்கள் மற்றும் சில பறவைகளும் இங்கு வந்துசெல்கின்றன.

life in Hang Sơn Đoòng
Hang Sơn Đoòng

இதன் சிறப்பாக உலகில் வேறெங்கும் வசிக்காத பிரத்யேக மீன்கள், சிலந்திகள், தேள்கள், இறால்கள் மற்றும் சில வகைப் பூச்சிகளையும் குகைக்குள் கண்டறிந்தனர்.

இந்த உயிரினங்கள் எவற்றுக்குமே கண்கள் இல்லை. மேலும் அவை எல்லாமும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன.

இந்த குகையில் இரண்டு இடங்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் வரும் வகையிலான துளைகள் உள்ளன. இந்த வெளிச்சம் தான் மொத்த குகைக்குமான உற்பத்தி மூலமாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த வெளிச்சத்தைக் கொண்டு 1.5 கி.மீ வரை மங்கலாக நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இல்லாததால் எதையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை, கண்களுக்கான தேவையே இல்லை.

இந்த குகையில் உள்ள காடுகளில் 50 மீட்டர் வரை உயரமான மரங்கள் வாழ்கின்றன என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.

இந்த குகையினுள் உள்ள சூழலியலைப் பொறுத்து உள்ளேயே மேகங்கள் கூட உருவாகலாம் என்கின்றனர்.

Hang Sơn Đoòng
Hang Sơn Đoòng

இந்த குகையின் சிறப்பு இது மிகப் பெரியது என்பது மட்டுமல்ல. இங்கு வசிக்கும் பல விதமான உயிரினங்கள், 4 மில்லியன் ஆண்டுக்கு முன்னான சூழல், அதற்கு உள்ளேயே இருக்கும் அழகிய இடங்கள், மரங்கள், நீச்சல் குளங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹாங் சன் தூங் குகைக்கு நாமும் பயணிக்க முடியுமா?

Oxalis Adventure Tours என்ற நிறுவனத்தின் மூலமாகவே இந்த குகைக்கு நாம் பயணிக்க முடியும். இதன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் ஹோவர்ட் லிம்பெர்ட்.

ஒரு ஆண்டுக்கு 1000 பயணிகளை மட்டுமே குகையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர். தேர்ந்த நீச்சல் வீரர்கள் கைடாக நம்முடன் வருவார்கள்.

பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இந்த குகையில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வியட்நாமின் ஏழ்மையான பகுதியாக இருந்த இந்த இடம் செல்வம் செழிக்கும் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.

இந்த குகைக்கு சென்று வர இரண்டரை லட்சம் வரை செலவாகலாம் என சில தளங்கள் தெரிவிக்கின்றன.

முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி- 12

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Jharkhand: ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்ரே என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, 40 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஒரே குடும்பத்தினர் மட்டுமே ... மேலும் பார்க்க

ஹில்டன் காத்மாண்டு: தீக்கிரையான ரூ.800 கோடி கனவு; நேபாளத்தின் உயரமான ஹோட்டல் பற்றி தெரியுமா?

நேபாளம் நாட்டில் இளைஞர்கள் கலவரத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமரின் மனை... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?

சீனாவின் புகழ் பெற்ற அரண்மனைஅரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள "ஏகாதிபத்திய அரண்மனை" (Imperial Pal... மேலும் பார்க்க

FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரி... மேலும் பார்க்க

England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை விற்பனை?

இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான கடலோர மாளிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 35.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடம்பர சொகுசு வீடு வெற... மேலும் பார்க்க