செய்திகள் :

உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?

post image

சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை

அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும்.

அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள "ஏகாதிபத்திய அரண்மனை" (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது.

இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது.

1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது.

இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த அரண்மனைக்குள் நுழைய சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மன்னர், அவரது குடும்பம், நம்பகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இதற்குள் வாழ்ந்தனர்.

அவர்களும் குறிப்பிட்ட பகுதிகளுக்குதான் அனுமதிக்கப்பட்டனர். மன்னருக்கு மட்டுமே முழு அரண்மனையையும் அணுக வாய்ப்பு இருந்தது.

மற்றவர்கள் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே வர முடியும். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1925-ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இதில் அரசப் பொருள்களின் தொகுப்புகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த நகரம் 2020-ல், தனது 600-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரி... மேலும் பார்க்க

England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை விற்பனை?

இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான கடலோர மாளிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 35.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடம்பர சொகுசு வீடு வெற... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து செல்லக்கூடிய 6 டூரிஸ்ட் ஸ்பாட்'ஸ் - பட்ஜெட் Trip செல்ல ரெடியா?

மூன்று நாள் தொடர் விடுமுறை; இதில் செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவுதான் இது. அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருப்பார்க... மேலும் பார்க்க

"செலவை விட அனுபவமே முக்கியம்" – குறைந்த செலவில் ஐரோப்பாவைச் சுற்றிய இந்தியப் பெண்; எப்படி தெரியுமா?

பொதுவாக ஐரோப்பா பயணம் என்றாலே அதிக செலவான, எளிதில் செல்ல முடியாத பயணமாக இருக்கும். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த கனக் அகர்வால் என்ற ஐஐடி பட்டதாரி, ஒரு ஐபோனின் விலையை விட குறைவான செலவில் நான்கு ஐரோப்பிய ந... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட தீவை ஆடம்பர டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றிய சாஃப்ட்வேர் இன்ஜினீயர் - எப்படி தெரியுமா?

ஒருகாலத்தில் வெறிச்சோடி காணப்பட்ட, நெப்போலியன் கால கோட்டையால் மட்டுமே அறியப்பட்ட தோர்ன் தீவு (Thorne Island), இன்று தனியார் ஆடம்பர கொண்டாட்டத் தலமாக மாறியுள்ளது. முன்னாள் சாப்ட்வேர் இன்ஜினீயர் மைக் கா... மேலும் பார்க்க

Nude Cruise Trend: பிரபலமாகும் அடையில்லா கப்பல் பயணம்; ஆர்வம் காட்டும் பயணிகள்; என்ன காரணம்?

அமெரிக்காவைச் சேர்ந்த ’பேர் நெசசிட்டீஸ்’ (Bare Necessities) என்ற நிறுவனம், பயணிகள் உடை அணியாமல் (Nude Cruise) செல்லும், கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்தப் பயணங்களின் நோக்கம், பயணிகள் தங்கள... மேலும் பார்க்க